Posted in

இரவில் நெஞ்செரிச்சல் அதிகமாக இருக்கிறதா?

அசிடிட்டியால் ரொம்ப அவதிப்படறீங்களா? அதுவும் இரவு நேர உணவுக்கு பிறகு நெஞ்செரிச்சல் அதிகமா இருக்கா? அதை குறைக்க தூங்க போறதுக்கு முன்னாடி இந்த 6 பானங்கள்ல ஒன்றை குடிச்சிட்டு தூங்குங்க. நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினையே வராது. அந்த பானங்கள் என்னென்னனு பார்க்கலாமா?

அசிடிட்டி அதனால் இரவில் ஏற்படும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றால் தூக்கம் மட்டுமின்றி குடல் இயககமும பாதிக்கப்படும. அதனால் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிக்கலுக்கு உள்ளாகும். இதை தடுப்பதற்கு இரவு தூங்கச் செல்லும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருள்களை வைத்து டீ போல ஒரு பானம் செய்து குடித்து வர அசிடிட்டி குறையும். அநத பானங்கள் என்னென்ன, அதன் செய்முறை என்ன என்று இங்கு விரிவாகப் பார்க்கலாம்

இஞ்சி நம்முடைய பாரம்பரிய வீட்டு மருத்துவத்தில் காலங்காலமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள். இந்த இஞ்சியில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகம். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஜீரணத்தை தூண்டுவதோடு அசிடிட்டி பிரச்சினையையும் சரிசெய்யும்.

இஞ்சியை கழுவி சுத்தம் செய்து தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் 2 கிளாஸ் அளவு தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அதில் தோல் சீவிய இஞ்சியை தட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்து இரண்டு டம்ளராக வற்றியதும் வடிகட்டி வெதுவெதுப்பானநிலையில் குடியுங்கள்.

புதினா நம்முடைய இந்திய சமையலறையில் இருக்கும மிக அற்புதமான மூலிகை தாவரம். புதினாவில் புத்துணர்ச்சி தரும் மெந்தால் பண்புகள் இருக்கின்றன. அதோடு குடல் சார்ந்த பிரச்சினைகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.

வாய்வுத் தொல்லை, வயிறு உப்பசம், அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.


ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்..

கொதிக்கும் நீரில் கால் ஸ்பூன் அளவு மட்டும் டீ தூள் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

பின்னர் 10-15 புதினா இலைகளை கழுவி எடுத்து கைகளால் கசக்கி அல்லது லேசாக இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை அணதை்து விட்டு அதில் கசக்கிய புதினா இலைகளைச் சேர்த்து ஒரு தட்டு போட்டு மூடி வையுங்கள்.

10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும் அதை வடிகட்டி குடிக்க வேண்டியது தான்.

சோம்பு டீ ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. இது அஜீரணக் கோளாறு, வாய்வுத் தொவ்வை, வயிறுஉப்பசம், நெஞ்சு எரிச்சல் போன்ற ஜீரண மண்டலம் தொடர்பான எல்லா வகை பிரச்சினைகளையும் சரிசெய்யும் தன்மை கொண்டது.

அசிடிட்டி மற்றும அஜீரணக் கோளாறு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கப் அளவு குடித்து வர இரவு நேர நெஞ்செரிச்சல் குறையும்


ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள்.

அதில் ஒரு ஸ்பூன் அளவு சோம்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.

சோம்பில் உள்ள சாறு முழுவதும் நீரில் இறங்கிய பின் வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் சிறிது சுவைக்காக எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.