Posted in

தாமரை வேர் : காசநோய், ஆஸ்துமா, ஜீரணம், இரத்த அழுத்தம் நோய்க்கு மருந்து.

தாமரை வேர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நன்மை பயக்கும் குணங்களை கொண்ட ஒன்று என்பது தெரியுமா? கொழுப்பு, செரிமான பிரச்சனை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தி உடலில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த செய்கிறது. தாமரை வேர், தாமரை வேர் சில்லுகள், தேநீர் வடிவில், சூப் வடிவில், தாமரை வேர் தூள் என பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இதன் நன்மைகள் என்ன எப்படி எடுத்துகொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

தாமரை மலரின் தண்டுகள் நீரில் மூழ்கியபடி இருக்கும். இது உருளை போன்ற வடிவில் இருக்கும். இதன் முழு தாவரமும் வெவ்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த வேரை பச்சையாக, வறுத்து வேகவைத்து என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவு கலோரிகள் இல்லை , மேலும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் தனித்துவமான கலவையை இவை கொண்டுள்ளது. இதன் வேரில் பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு ,பாந்தோனிக் அமிலம், துத்தநாகம், வைட்டமின் பி6 மற்றும் சி போன்றவை உள்ளன. மேலும் இவற்றில் புரதம் மற்றும் நார்ச்சத்தும் உள்ளது.

தாமரை வேரில் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. இது உடலில் உள்ள திரவங்களை பராமரிக்க உதவுகிறது. மேலும் உடலில் சோடியம் விளைவுகளை எதிர்க்கிறது. பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்வாக வைத்திருக்க செய்கிறது,. மற்றும் இரத்த நாளங்களின் சுருக்கத்தை குறைப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள தாமிரம் மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பு அணுக்கள் உருவாவதை தூண்டுகிறது.

தாமரை வேரில் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து மலத்தை அதிக அளவில் சேர்த்து உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் மலம் தேங்கி மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கபடுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து இரைப்பை சாறுகளை வெளியிட தூண்டுகிறது. இது உணவை உடைத்து உடல் ஊட்டச்சத்த உறிஞ்ச உதவுகிறது. இதனால் செரிமானம் சீராவதுடன் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்தும் முழுமையாக கிடைக்கிறது.

தாமரை வேர் இதயத்துக்கு நன்மை அளிக்க கூடியவை. இதில் பொட்டாசியம் மற்றும் டயட்டரி ஃபைபர் உள்ளது. இது இரத்தத்தில் இருந்து கொழுப்பை அகற்ற உதவுகிறது. தமனிகள் அடைப்பை தடுக்கிறது. மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. இந்த தாமரை வேரில் பைரிடாக்ஸின் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டின் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தாமரை வேர் எடுத்துகொள்வது சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்த செய்கிறது. சுவாச நோய்களை தடுக்கிறது. கட்டுப்படுத்துகிறது. நெஞ்சில் இருக்கும் சளியை திரட்டி அகற்றுகிறது. மேலும் சளியால் வரக்கூடிய இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது, சுவாச நோய்களன ஆஸ்துமா, காசநோய் போன்றவற்று சிகிச்சை பெறும் போது துணை மருந்து போல் இவை செயல்படுகிறது.

தாமரை வேரில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த ஆக்ஸினேற்றியாகும். வைட்டமின் சி உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிரானது. இது சளி காய்ச்சல் தொடங்கி இதய நோய், புற்றுநோய் வரை பல்வேறு நோய்களிலிருந்து தடுக்ககூடியவை. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் ஊக்குவித்து இரத்த நாளங்கள், தொல் மற்றும் உறுப்புகளின் விறைப்புத்தன்மையை பராமரிக்க செய்கிறது.

தாமரை வேர் மன ஆரொக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளடக்கியது. இதில் உள்ள பைரிடாக்ஸின் மூளையின் நரம்பியல் ஏற்பிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் மன ஆரோக்கியத்தை சீராக்க உதவுகிறது. இது தலைவலி, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்ற கோளாறுகளை கட்டுப்படுத்த செய்கிறது.

தாமரை வேர் வைட்டமின் ஏ உள்ளது. இதை உணவில் சேர்ப்பது கண்கள் முடி மற்றும் சருமம் என அனைத்துக்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ ஆண்டி – ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் மாகுலர் சிதைவு கண் நோய்களை தடுக்க கூடியது. மேலும் தோல் சிகிச்சை வீக்கம் போன்றவற்றுக்கும் உதவுகிறது.