குடல் கோளாறுகளில் மோசமானது மலச்சிக்கல். மலச்சிக்கல் இல்லாமல் மலம் வெளியேற விரும்பினால் நீங்கள் இந்த மூலிகை தேநீர் முயற்சிக்கலாம். இது செரிமான அமைப்பை தூண்டி மலத்தை தூண்டி மலச்சிக்கலை போக்க உதவும். அப்படியான மூலிகைகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
மலச்சிக்கல் வாரத்தில் மூன்றுக்கும் குறைவாக குடல் அசைவுகள் இருந்தால் அது மலச்சிக்கல் என்று அழைக்கப்படுகிறது. தினமும் குடல் இயக்கம் இல்லாத நிலை தொடர்ந்தால் மலச்சிக்கல் உண்டாகலாம். இந்நிலையில் மலம் இறுகி கடினமாக இருக்கும். உலர்ந்த மலமாக இருக்கும். மலம் வெளியேற்றுவது கடினமாக இருக்கும். இவர்கள் மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலை போக்கலாம்.
மூலிகைகள் மலச்சிக்கலை போக்குமா?

அதிக திரவங்கள் குடிப்பது நீரேற்றமாக இருக்க உதவும். நீரிழப்பு மலச்சிக்கலின் பொதுவான காரணமாக இருக்கலாம். இது மலத்தை மென்மையாக்கவும் எளிதாக வெளியேற்றவும் உதவும். சூடான தேநீர் மன அழுத்தத்தை தணிக்கும். மன அழுத்தம் மலச்சிக்கலில் பங்குவகிக்கலாம்.
அதே நேரம் மருத்துவ குணங்கள் கொண்ட தேயிலை மலசிக்கல் பிரச்சனைக்கு பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. குறிப்பாக கர்ப்பிணிகள், குறிப்பிட்ட நோய்க்காக மருந்து எடுத்துகொள்பவர்கள் மூலிகை தேநீரை சுயமாக எடுக்க கூடாது.
மலச்சிக்கலை போக்கும் பெருஞ்சீரகம் டீ

பெருஞ்சீரகம் வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான அறிகுறிகளை போக்க பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு 50 வயது பெரியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறிய ஆய்வில் பெருஞ்சீரகம் மற்றும் ரோஜா இதழ் தேநீர் குடித்தவர்கள் 4 வாரங்களுக்கு பிறகு மலச்சிக்கல் அறிகுறிகளை மேம்படுத்தியது கண்டறியப்பட்டது. இது சிறிய ஆய்வு என்பதால் பெருஞ்சீரகம் சிறியவர்களுக்கு பயனளிக்கும் என்பதை அறிய கூடுதல் ஆய்வு தேவை.
என்ன செய்வது
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டீஸ்பூன் பெருஞ்சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து இளஞ்சூட்டில் வடிகட்டி குடிக்கலாம்.
மலச்சிக்கலை போக்கும் இஞ்சி டீ

இஞ்சி வாயு, வீக்கம் மற்றும் குமட்டலை குறைக்க செய்யும். இஞ்சி வேர் மலச்சிக்கலுக்கு உதவும் என்பதற்கு ஆய்வுகள் உள்ளன. 2023 ஆம் ஆண்டில் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் (நோயெதிர்ப்பு மண்டலம் நரம்புகளை சுற்றியுள்ள பாதுகாப்பு உறையை தாக்குகிறது )உள்ளவர்களை மையமாக கொண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில் இஞ்சி 3 வாரங்களில் மலச்சிக்கலை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த இஞ்சி தேநீர் ஆனது மல்டிபிள் ஸ்களீரோஸிஸ் இல்லாதவர்களுக்கு பொருந்தாது.
என்ன செய்வது
நீரை கொதிக்க வைத்து இஞ்சியை தட்டி சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்கலாம். தேவையெனில் தேன் சேர்க்கலாம்.
மலச்சிக்கலை போக்கும் ப்ளாக் டீ

ப்ளாக் டீ காஃபின் உள்ளது. இது உடல் செயல்பாடுகளை விரைவுப்படுத்த செய்யும். காஃபின் கல்ந்த இந்த பானங்கள் குடல் இயக்கத்தை தூண்டும். எனினும் மலச்சிக்கலுக்கு இவை எவ்வளவு பயனளிக்கும் என்பதை அறிய சிறிய அறிவியல் ஆராய்ச்சி தேவை. அதே நேரம் காஃபின் குடிப்பவரது உணர்திறனை பொருத்து நம்பகமான மூலத்தை ஏற்படுத்தும். அதிகமாக எடுக்கும் போது இது மலச்சிக்கலை உண்டு செய்யும்.
என்ன செய்வது
நீரை கொதிக்க வைத்து அரை டீஸ்பூன் தேயிலை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்கலாம்.
மலச்சிக்கலை போக்கும் எல்டர்பெர்ரி

இது கருப்பு எல்டர்பெர்ரி என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரியமாக சளி, காய்ச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றுக்கு இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 2014 ஆம் ஆண்டின் ஐரோப்பிய ஏஜென்சியின் மருந்துகள் அறிக்கை எல்டர் பெர்ரி தேநீர் மற்றும் இதன் சிரப் மலச்சிக்கல் சிகிச்சைக்கு உதவுவதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் இதன் விளைவுகள் சமீபத்திய ஆராய்ச்சியில் எதையும் சோதிக்கவில்லை என்பதால் அது எவ்வாறு செயல்படுகிறது என்பது கண்டறிய ப்படவில்லை.
மலச்சிக்கலை போக்கும் சிலிப்பெரி எல்ம்

செரிமான பி ரச்சனைகளை சரி செய்து ஆரோக்கியம் மேம்பட Slippery elm என்னும் மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான அமைப்பில் பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதன் மூலம் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்டு மற்றும் சளி போன்று பசை பொருள் ஆனது மலத்தை மொத்தமாக சேர்க்க உதவுகிறது.
2021 ஆம் ஆண்டின்படி இந்த சிலிப்பெரி எல்ம் செரிமான மண்டலத்தில் உள்ள சளி அடுக்கின் பகுதியாக இருக்கும் மியுசின் உற்பத்தி தூண்டி குடலுக்கு உயவு ஊட்டுகிறது. இந்த மதிப்பாய்வு குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் சப்ளிமெண்ட் கொடுப்பதில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதை தேநீராக்கி எடுப்பது மலச்சிக்கலை போக்க உதவும்.
மலச்சிக்கலை போக்கும் ருபார்ப் டீ

ருபார்ப் இலைகளை இன்று உணவில் அதிகமாக சேர்க்க தொடங்கிவிட்டோம். 2022 ஆம் ஆண்டு பெண்களை பற்றீய ஆய்வில் 30 நாட்களுக்கு ருபார்ப் சாறு மலத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது என்று கண்டறியப்பட்டது. ருபார்ப் தேநீர் இந்த விளைவை கொண்டில்லை என்றாலும் இதன் சாறு உதவியது குறிப்பிடத்தக்கது.
மலச்சிக்கலை போக்கும் நிலா வாரை டீ

நிலா வாரை என்பது சிறந்த மலமிளக்கியாகும். உலர்ந்த இலைகள் மற்றும் இதன் காய்களில் கிளைகோசைடுகள் என்னும் கலவைகள் உள்ளன. இந்த கலவைகள் செரிமான அமைப்பை மேம்படுத்துகின்றன. இதனால் மலமிளக்கிய விளைவுகள் ஏற்படுகின்றன.
2021 ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்று. நிலாவாரை மலச்சிக்கல் செயல்திறனை மேம்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவற்றை மாத்திரையாக அல்லாமல் தேநீராக்கி எடுக்கலாம்.
