Posted in

நீண்ட அடர்ந்த கருகரு கூந்தலுக்கு டாப் 7 மூலிகைகள்.

பொதுவாக முடி பராமரிப்பில் செய்யும் தவறுகள் கூந்தலை சற்று அதிகமாகவே பாதிக்க செய்கின்றன. முடிக்கு ஷாம்புகள், கண்டிஷனர்கள், சீரம் என்று பயன்படுத்தும் போது அவற்றில் உள்ள இராசயனங்கள் கூந்தலை பாதித்து வளர்ச்சியை தடுக்க செய்யும். இதை எதிர்கொள்ள இயற்கையான முறையில் கூந்தலை பாதுகாப்பது அவசியம். குறிப்பாக ஆயுர்வேத மூலிகைகள் உடல் ஆரோக்கியம் போன்று சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த செய்கின்றன. இவற்றை தலைமுடி ஆரோக்கியத்தின் உள் பராமரிப்பிலும். வெளிப்பராமரிப்பிலும் பயன்படுத்துவதன் மூலம் நீண்ட கருகரு கூந்தலை பெறலாம். அப்படியான மூலிகைகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

கரிசலாங்கண்ணி கீரை. முன்னோர்கள் காலத்தில் உணவாக பயன்படுத்தி வந்த நிலையில் ஆயுர்வேதம் இதை கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த ஒன்றாக பார்க்கிறது. மூலிகைகளின் ராஜா என்றழைக்கப்படும் பிரிங்கிராஜ் முடி அமைப்பை ஊக்குவிக்கிறது. இது முடி வளர்ச்சி மேம்படுத்துகிறது. மேலும் இளநரை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

பிரிங்கிராஜ் சேர்த்த ஷாம்பு கடைகளில் கிடைக்கும். அதை கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
பிரிங்கிராஜ் இலை கொண்டு கூந்தல் எண்ணெய் தயாரிக்கலாம். ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம்.
இதை உள்ளுக்கு எடுப்பதன் மூலம் கூந்தலுக்கு போதுமான சத்துகிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *