Posted in

திரிபலா பொடியை நெய்.. பால்.. தேன்.. எதில் கலந்து எப்படி எடுக்கணும்.

திரிபலா ஆயுர்வேதத்தில் மிக மிக முக்கியமானது. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மூன்று வித கலவைகளின் தயாரிப்பான இதை இன்று பலரும் பல பிரச்சனைகளில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இது முதன்மையானது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதை பயன்படுத்தி வருகிறோம். திரிபலாவின் நன்மைகளை உணர்ந்து உலகம் முழுவதும் இதை பயன்படுத்த தொடங்கியிருக்கும் நிலையில் இவற்றை எதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

திரிபலாவில் சேர்க்கப்படும் மூன்று வித கலவைகளும் பிரத்யேகமான மருத்துவ குணங்களை கொண்டவை. இவற்றீல் கேல்லிக் அமிலம், எலாஜிக் அமிலம், செபுலிக் அமிலம், செபுலாஜிக் அமிலம், செபுலினிக் அமிலம், நியோசெபுலினிக் அமிலம், கொரிலஜின் டெர்சபின், டெர்ஃபாவின், புனிகலஜின் மற்றும் டானின்கள் அதிகம் உள்ளன. மேலும் இவற்றில் மாவுச்சத்து, அமினோ அமிலங்கள்,அஸ்பார்மிக் அமிலம், லைசின், அர்ஜினைன் மற்றும் புரோலின், சிட்டோஸ்டெரால், சுசினிக் அமிலம் , பிரக்டோஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், எண்ணெய்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆயுர்வேதத்தில் திரிபலாவை எதற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

ஆயுர்வேதத்தில் திரிதோஷிக் ரசாயனம் என்று சொல்லப்படுகின்றன. இது உடலில் வாதம், பித்தம், தோஷம் மூன்றையும் சமநிலைப்படுத்துகின்றன. திரிபலாவை பல நோய்களுக்கு மருந்தாக இது பயன்படுத்தப்படுகின்றன.

  • இரத்த சுத்திகரிப்பு
  • மலமிளக்கி
  • அழற்சி எதிர்ப்பு
  • வலி நிவாரணி
  • மூட்டுவலி
  • இரத்த சர்க்கரை குறைவு
  • பாக்டீரியா எதிர்ப்பு
  • சோர்வு
  • மூட்டுவி
  • ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்
  • காச நோய்
  • நிமோனியா
  • லுகோரியா
  • திரிபலா தொற்று நீக்க பயன்படுகிறது
  • பல் நோய்களுக்கு எதிராக திரிபலா உதவுகிறது
  • திரிபலா மன அழுத்தம் போக்க செய்கிறது
  • மூட்டுவலிகளுக்கு திரிபலா வலிநிவாரணியாக இருக்கும்
  • செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க செய்கிறது
  • கல்லீரலுக்கு நன்மை செய்கிறது
  • நீரிழிவு நோயாளிகளுக்கு திரிபலா நன்மை செய்யும்.
  • உடல் எடை இழப்புக்கு திரிபலா உதவும்
  • இதய நோய் பிரச்சனைகளுக்கு திரிபலா நன்மை செய்யும்
  • சரும ஆரோக்கியத்துக்கு திரிபலா நல்லது
  • இனப்பெருக்க மண்டலத்துக்கு திரிபலா நன்மை செய்கிறது
  • உடலில் நோயெதிர்ப்பு சக்திக்கு திரிபலா உதவும்
  • திரிபலா ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் கொண்டது
  • திரிபலா கண்களுக்கு நன்மை செய்யும்
  • புற்றுநோய் செல்களை அழிக்க திரிபலா உதவுகிறது
  • வயதான தோற்றத்தை சரி செய்ய திரிபலா உதவுகிறது

திரிபலா பொடி நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போன்ற மூலிகைகள் அடங்கிய தரமான ஒன்றாக இருக்க வேண்டும். வயதுக்கேற்ப திரிபலா பொடியை நெய், பால், தேன், வெந்நீர் என்று கலந்து எடுக்கலாம். தினசரி எடுக்க கூடாது, சரியான அளவில் எடுக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் வரை எடுக்க வேண்டும். இது குறித்து மருத்துவருடன் ஆலோசித்து மட்டுமே எடுக்க வேண்டும்.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ஒரு டீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு திரிபலா குழைத்து கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நெய்யில் திரிபலா பொடியை கலந்து கொடுக்கலாம்.
இளவயதினரும், நடுத்தர வயதினரும் இரவு பாலில் திரிபலா பொடியை கலந்து குடிக்கலாம்.

3 டீஸ்பூன் திரிபலா பொடியை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு இறக்கி சுத்தமான துணியை கொண்டு வடிகட்டி விடவும். நீர் நன்றாக அடர்த்தியாக இருக்க வேண்டும். பிறகு நீரை தோல் மீது தடவி விடவும், உலர உலர பிறகு மீண்டும் மீண்டும் தேய்த்து விடவும். இது தோல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும். தோல் வெடிப்புகளை குறைத்து மென்மையாக மாற்றும். தோல் தொற்றை குறைக்க செய்யும்.

ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதில் அரை டீஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். பெருங்குடல் வலி, புழுதொல்லை மற்றும் சிறுநீர் நோய்கள் போன்றவற்றுக்கு அருமருந்தாக இருக்கும். இந்த நீரை கண்களுக்கு நேரடியாக பயன்படுத்தவேண்டும். இது தொண்டை அழற்சி நிலைக்கு உதவுகிறது. இந்த நீரை கொண்டு வாய் கொப்புளித்தால் தொண்டை வலி குறையும்.

திரிபலா பொடியை எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து திரிபலா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை கொண்டு வாய் கொப்புளிக்கும் போது இது தொண்டை அழற்சியை சரி செய்யும். மூக்கடைப்பு இருக்கும் போது அதை நிவர்த்தி செய்ய உதவும். எனிமா மற்றும் உடல் பருமன் அரிப்புக்கு சிகிச்சையளிக்க இது வாய்வழியாக பயன்படுத்தப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த வெப்பநிலையில் திரிபலா பொடியை சூடாக்கி இந்த திரிபலா மாசி பயன்படுத்தப்படுகிறது. மாசி என்பது கரிம மற்றூம் கனிம பொருள்களை கொண்ட இடைநிலை தயாரிப்பு ஆகும். இவை கருப்பு மற்றும் அதிக கார்பன் மற்றும் ஆக்சைடு உள்ளடக்கம் உள்ளது. இதை தேனுடன் கலந்து காயங்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.